அநுர அரசுக்கு கடலுக்கு அடியில் கிடைத்த பல பில்லியன் ஜாக்பொட்...
இலங்கை தற்போது ஐ.எம்.எப்பின் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளும், ஆனால் அதிலிருந்து முற்றாக வெளிவரும் நேரம் வரும் என்று பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போதைய பூகோள அரசியலில் கனிம வளங்களை நோக்கிதான் உலக அரசுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்து சமுத்திரத்தின் கீழுள்ள கனிமவளங்களை நோக்கி இந்தியா நகர்வதால் சீனா அச்சமடைந்துள்ளதாக சர்வதேச பத்திரிக்கையொன்று தகவல் வெளியிட்டது.
அதனை தொடர்ந்து இலங்கையின் ஆட்சி மாறிவிட்ட நிலையில், தற்போது இந்த விடயத்தில் சீனாவிற்கு எந்த பிரச்சனையுமில்லை.
இந்த கனிமங்கள் நிறைந்த மலை இலங்கையின் பொருளாதாரத்தை வெகுவாக உயர்த்தி விடும்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி....
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri