உலகின் மிக மோசமான காளான்களை வைத்து செய்யப்பட்ட படுகொலைகள்.. பெண்ணுக்கு கடும் தண்டனை
உலகின் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த காளான்களை மூன்று மதிய உணவு விருந்தினர்களுக்கு அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணொருவர் கொடுத்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் பிணை இல்லாத மூன்று ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றின் உத்தரவு
அந்த பெண் கடந்த 2023ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள தனது கிராமப்புற வீட்டிற்கு அருகில் உள்ள சில காளான்களை எடுத்து மாட்டிறைச்சி வெலிங்டன் உணவுடன் கலந்து மூன்று பேருக்கு கொடுத்துள்ளார்.

இதன்போது இருவர் மிக கொடூரமான விளைவுகளை சந்தித்து உயிரிழந்துள்ளனர். அதேவேளை, ஒருவர் மாத்திரம் சிகிச்சைகளுக்கு பின்னர் உயிர் பிழைத்துள்ளார்.
குறித்த பெண் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது 33 ஆண்டுகள் பிணை இல்லாத மூன்று ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri