திருகோணமலையில் தேசிய ஆக்கத் திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா!
திருகோணமலையில் தேசிய ஆக்கத் திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா நேற்று (11) திருகோணமலை மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கலை கலாசார நிகழ்வு
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசணையுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றதுடன் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ந.மதிவண்ணன், அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் பிரதம குரு வேதாகமமாணி பிரமஸ்ரீ. சோ.இரவிச் சந்திர குருக்கல், மாவட்ட செயலக இந்து சமய கலாசார திணைக்கள அதிகாரி,இந்து சமய கலாசார உத்தியோகத்தர்கள்,உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





