சுதந்திர தினத்தில் தமிழ் மொழியிலும் தேசியகீதம் பாடப்பட வேண்டும்! - மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை
சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழியும் அரச கரும மொழியாக உள்ளமையினால் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தினை பாடுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இன்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,
பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தமையை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழியும் அரச கரும மொழியாக இருக்கின்ற படியினால் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாடுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என்று மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆகிய நாம் வலியுறுத்துகின்றோம்.
இது தமிழ் மொழியிலும் பாடப்படும் போது இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக்கான ஒருவழியாக அமையும் என்று நம்புகின்றோம்.
இல்லையேல் இது இனப்பிரச்சினை தீர்வுக்கான வழியினை அடைக்கும் செயலாகவே அமையுமென்பதனை வலியுறுத்தி நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam