சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு (PHOTOS)
மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து சுமார் 11 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரால் சந்தேகநபர்கள் இருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களிடம் இருந்த சுமார் 11 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளளனர்.
இராணுவ புலனாய்வு துறை
இராணுவ புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கூலர் ரக வாகனத்தின் முன் இருக்கையில் சூட்சுமமான முறையில் பதுக்கி வைத்து கொண்டு செல்லப்பட்ட 10 பொதிகளை கொண்ட 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பெரிய கடை மற்றும் தலைமன்னார் கிராமம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட ஐஸ் போதைப் பொருட்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச் சமபவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்









