60 அடி கம்பத்தில் இருந்து விழுந்து மரணித்த நபர்! பதற வைக்கும் காணொளி..
நானு ஓயா பகுதியில் இடம்பெற்ற பொன்னர் சங்கர் வரலாற்று நாடகத்தில் கம்ப மரம் ஏறும் போது தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நானு ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாசோ தோட்ட பகுதியில், இன்று(27) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிர்ச்சிக் காணொளி
சுமார் 60 அடி உயரம் கொண்ட மரத்தில் இருந்து குறித்த நபர் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நானு ஓயா - கிளாசோ தோட்டத்தைச் சேர்ந்த 63 வயதுடைய முருகன் சதாசிவம் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இவர் பொன்னர் சங்கர் வரலாற்று கூத்து நாடகத்தில் பெரிய அண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வேடமிட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் இரவு ஆரம்பிக்கப்பட் பொன்னர் சங்கர் வரலாற்று நாடகம் இன்று அதிகாலை வரை தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானு ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




₹25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களா முதல் ₹3 கோடி மெர்சிடிஸ் கார் வரை! ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான வாழ்க்கை News Lankasri

புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan
