நாமலின் பிரித்தானிய விஜயம்.. தமிழ் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பால் இரத்து செய்யப்பட்ட முக்கிய நிகழ்வு
இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் சொசைட்டியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சொற்பொழிவு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சொற்பொழிவுக்கு பிரித்தானியாவில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் சிலரின் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான எதிர்ப்பு
இம்மாத இறுதியில் பிரித்தானியாவுக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது ஒக்ஸ்போர்டு சொசைட்டி மற்றும் கேம்பிரிட்ஜ் சொசைட்டி இரண்டிலும் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்திருந்தது.

இருப்பினும், பிரித்தானியா முழுவதும் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் குழுக்களும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்களும் இந்த நிகழ்வில் அவர் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் குறித்த கட்சி தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்ப்புகள் மற்றும் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், கேம்பிரிட்ஜ் சொசைட்டி சொற்பொழிவை இரத்து செய்ய ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan