இந்தியாவுடன் அரசாங்கம் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் நாமலின் கேள்வி
இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
வெலிமடை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவுடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்து தகவல்கள் வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
அரசாங்கம் கூறும் விடயம்
எனினும் இந்தியாவின் அனுமதியின்றி அதனை வெளிப்படுத்த முடியாதென அரசாங்கம் கூறுகிறது.

குறைந்தபட்சம் அரசாங்கத்தில் உள்ள 159 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட அறிவிக்கப்படாமல் இந்தியாவுடன் உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருத்துரைத்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலேயே தங்களது உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றுமொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan