இலங்கையர்களை ஏமாற்றும் மோசடியின் பின்னணியில் நாமல் - வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் தடைசெய்யப்பட்ட மூன்று பிரமிட் திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்யுமாறு மத்திய வங்கி, சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் அந்த 3 திட்டங்களுக்கு ஒன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதென தகவல்கள் வெளியாகி உள்ளன.
OnmaxDT என்ற இலங்கையில் மிகவும் பிரபலமான பிரமிட் திட்டமே நாமலுக்கு சொந்தமானதென கூறப்படுகின்றது.
OnmaxDT என்பது அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள ஒரு நிறுவனம் என விளம்பரப்படுத்தப்படுகின்றது. எனினும் இந்த நிறுவனத்துக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்பு இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், கிரிப்டோ மைனிங்கிற்கும் பிட்காயின் பரிவர்த்தனைகளை நடத்தும் OnmaxDT என்ற நிறுவனத்திற்கும் நாமல் ராஜபக்சவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என அவரது ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்தத் திட்டத்தின் மூலம் நாடாளவிய ரீதியில் பலர் தமது பணத்தினை முதலீடு செய்துள்ளனர். மலையகத்தை சேர்ந்தவர்களில் இதில் அதிகம் ஈடுபட்டுள்ளதாக அண்மைய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri