சிறையில் வாடும் நாமலுக்கு இந்திய அரசிடமிருந்து அழைப்பு.. பிணைக்காக போராடும் மொட்டுதரப்பு

Namal Rajapaksa Bribery Commission Sri Lanka Government Of India Sri Lanka Podujana Peramuna
By Sajithra Sep 18, 2026 01:48 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கையில், இந்திய அரசின் அழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பௌத்த மத சடங்கு ஆகியவை முக்கிய காரணங்களாக சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்று (18) கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டார்.

நீதிமன்றம் அவரது பிணை மனுவை நிராகரித்த நிலையில், தற்போது விதிவிலக்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாக நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய நிகழ்வுகள்.. 

இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய அரசாங்கத்திடம் இருந்து ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அந்த விஜயத்தை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறையில் வாடும் நாமலுக்கு இந்திய அரசிடமிருந்து அழைப்பு.. பிணைக்காக போராடும் மொட்டுதரப்பு | Namal Airbus Case Bail Application Reasons Given

அதுமாத்திரமன்றி, வருடாந்த ஹிங்குராக்கொட எசல பெரஹரவின் போது இடம்பெறும் மதச்சடங்கில் கலந்துகொள்ளுமாறும் பிரதம பௌத்த மதகுரு ஒருவரால் நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாதுகாப்புத் தரப்பின் கூற்றுப்படி, செப்டெம்பர் 26ஆம் திகதி அன்று இரவு 7:42 மணிக்கு விகாரையொன்றில் கொத்தணி சூட்டும் நிகழ்வில் பங்கேற்க நாமல் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார் என்றும், அதில் கலந்துகொள்ள முடியாமை அழைப்பு விடுத்த மதகுருவை அவமதிப்பதாக அமையும் என்றும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். 

சிறையில் வாடும் நாமலுக்கு இந்திய அரசிடமிருந்து அழைப்பு.. பிணைக்காக போராடும் மொட்டுதரப்பு | Namal Airbus Case Bail Application Reasons Given

மேலும், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையில் ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை என்றும், தொழிலதிபர் நிமல் பெரேராவின் வாக்குமூலங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தியும் சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.

இந்தச் சமர்ப்பிப்புகளுக்குப் பதிலளித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்திய விஜயமோ அல்லது மதச் சடங்கோ பிணை வழங்குவதற்குரிய விதிவிலக்கான சூழ்நிலைகளாக அமையாது என குறிப்பிட்டுள்ளார்.

மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர் மற்றும் நாமல் ஒரே சிறையில்..! வெளியான முக்கிய தகவல்

மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர் மற்றும் நாமல் ஒரே சிறையில்..! வெளியான முக்கிய தகவல்

நாமலின் பரிதாப நிலை - அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதி உட்பட ராஜபக்ச கூட்டணி

நாமலின் பரிதாப நிலை - அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதி உட்பட ராஜபக்ச கூட்டணி

YOU MAY LIKE THIS.. 


36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US