ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கிடைத்த உத்தரவு! அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நளினி கூறியுள்ள விடயம்
லண்டனில் வசித்து வரும் தன்னுடைய மகள் ஹரித்ராவுடன் வாழ விரும்புவதாக நளினி தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயர்ஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய ஏழு பேரும் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். பேரறிவாளன் கடந்த மே மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஏனைய ஆறு பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து ஆறு பேரும் இன்றைய தினம் சிறையில் இருந்து விடுதலையாவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீர்ப்பு கிடைத்த பின்னர் ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நளினியின் அடுத்தகட்ட நடவடிக்கை
அவர் மேலும் கூறுகையில், பேரறிவாளனின் விடுதலைக்கு பிறகு 6 பேரும் விடுதலையாவோம் என நம்பிக்கை இருந்தது. தற்போது நாம் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
32 ஆண்டுகளாக மறக்காமல் இருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி. 32 ஆண்டுகளாக சிறையில் இருந்தோம். இனிமேல் என்ன சந்தோஷம்? 6 பேரும் அவரவர் குடும்பத்துடன் சேரவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
என் மகள் ஹரித்ராவுடன் வாழ விரும்புகிறேன், என் மகள் சொல்வதை வைத்து இனி என்ன செய்ய வேண்டும் என்று நடவடிக்கைகளை எடுப்பேன் என கூறியுள்ளார்.
மேலும் நளினியின் மகள் ஹரித்ரா தற்போது லண்டனில் மருத்துவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 8 மணி நேரம் முன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan
