மக்களை வீதிக்கு இறக்கப்போகிறதா அநுர அரசாங்கம்..! கொந்தளிப்புடன் எழும் கேள்வி

Sri Lanka Politician Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Government Economy of Sri Lanka
By Rakesh Jun 04, 2026 09:05 AM GMT
Report

நாட்டின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முறையற்ற செயல்பாடுகள் மற்றும் திட்டமிடல் இல்லாத பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, இந்த நிர்வாகத்தால் நாட்டை ஒருபோதும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இப்போது மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர் என சர்வஜன அதிகாரம் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளர் நளின் பத்திரண தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் மோசமடைந்து வரும் பொருளாதார நிலை குறித்து ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் கோர விபத்து.! பெற்றோர் கண்முன்னே பறிபோன 2 வயது சிறுமியின் உயிர்

கண்டியில் கோர விபத்து.! பெற்றோர் கண்முன்னே பறிபோன 2 வயது சிறுமியின் உயிர்

இருண்ட நிலையில் இலங்கை அரசு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த தேர்தல்கள் மூலம் இந்த அரசாங்கத்திற்குப் பாரிய எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்த எமது நாட்டு மக்களுக்கே, தற்போதைய சூழலில் இவர்களின் நிர்வாக இயலாமை மற்றும் வெறும் மேடை வாய்ச் சவடால்கள் குறித்து நன்கு தெரியவந்துள்ளது.

அரசாங்கம் நாளுக்கு நாள் சந்தித்து வரும் தனது தொடர்ச்சியான தோல்விகளை, மேலும் மேலும் புதிய பொய்களைக் கூறி மக்கள் மத்தியில் மூடிமறைக்க இனிமேலும் முயலக் கூடாது.

மக்களை வீதிக்கு இறக்கப்போகிறதா அநுர அரசாங்கம்..! கொந்தளிப்புடன் எழும் கேள்வி | Nalin Pathirana Criticizes Anura Government

பொதுமக்கள் தங்களின் வாழ்வாதார நெருக்கடி தாளாது மீண்டும் பெருமளவில் வீதிக்கு இறங்கி, அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அடித்து விரட்டும் வரை அல்லது ஆட்சியாளர்கள் மக்கள் பயத்தில் ஒளிந்து கொள்ளும் இருண்ட நிலை ஏற்படும் வரை காத்திருக்கக் கூடாது.

அவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர், நாட்டைச் சரியான பொருளாதாரப் பாதையில் நிர்வகிக்கக் கூடிய உண்மையான தகுதியும் ஆளுமையும் கொண்ட ஒருவரிடம் இந்த நாட்டை வழிநடத்தும் பொறுப்பை அரசாங்கம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

நாட்டை பொறுப்பேற்க தயார்

எமது சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலீத் ஜயவீர, இந்த நாட்டை இப்போதே பொறுப்பேற்று மிகவும் வெற்றிகரமான பாதையில் வழிநடத்துவதற்குத் தயாராக இருக்கின்றார்.

கடுமையான பொருளாதாரச் சரிவினால் வீழ்ந்து கிடக்கும் நாட்டை மீண்டும் மிக விரைவாக இயல்பு நிலைக்குக் கொண்டுவரக் கூடிய உன்னத ஆற்றலும், தொழில்சார் வியூகங்களும் அவரிடம் மட்டுமே உண்டு என்பதை நாம் உறுதியாகக் கூறிக்கொள்கின்றோம்.

மக்களை வீதிக்கு இறக்கப்போகிறதா அநுர அரசாங்கம்..! கொந்தளிப்புடன் எழும் கேள்வி | Nalin Pathirana Criticizes Anura Government

எனவே, அரசாங்கம் தங்களின் பிடிவாதப் போக்கினால் மேலும் காலத்தைக் கடத்தாமல், நாட்டை ஆளத் தகுதியான வல்லுநர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க முன்வர வேண்டும்.

நாளுக்கு நாள் மக்களை மேலும் வறுமை மற்றும் தீராத துன்பப் படுகுழியில் தள்ளும் இந்த மோசமான செயல்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை நாம் வன்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.    

கோட்டாபயவுக்குப் பயணத்தடை விதித்தமை அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்! குற்றஞ்சாட்டும் சரத் வீரசேகர

கோட்டாபயவுக்குப் பயணத்தடை விதித்தமை அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்! குற்றஞ்சாட்டும் சரத் வீரசேகர

பொன் சிவகுமாரன் நினைவேந்தல் ஏற்பாடு : தவிசாளர் விசாரணைக்கு அழைப்பு

பொன் சிவகுமாரன் நினைவேந்தல் ஏற்பாடு : தவிசாளர் விசாரணைக்கு அழைப்பு



மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US