நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மண்டலாபிஷேக உற்சவம்
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்தின் மண்டலாபிஷேக நிறைவு உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
குறித்த 33 குண்ட பக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகமானது இன்று (20.02.2024) 09.38 மணிமுதல் 11.20 மணி வரையான சுபவேளையில் சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.
விஷேட அபிஷேக ஆராதணை
இதன்போது நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் மற்றும் ஏனைய பாரிவார தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதணைகள் இடம்பெற்று உள்வீதி ஊடாக சிம்ம வாகனத்தில் வீற்று அம்பிகை பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.

இந்த உற்சவத்தில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு மண்டலாபிஷேக உற்சவ அருட்கடாச்சத்தினை பெற்றுச்சென்றுள்ளனர்.
அத்துடன் மண்டலாபிஷேக கிரியைகளை சிவஸ்ரீ ப.மு.பால குமாரகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan