முத்துநகர் மக்களின் காணிகளை அபகரிக்க வேண்டாம்: திருகோணமலையில் போராட்டம்

Trincomalee Eastern Province
By Kiyas Shafe Jul 29, 2025 01:45 PM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

in சமூகம்
Report

திருகோணமலை மாவட்டத்தின் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முத்து நகர் கிராம மக்களை, அங்கிருந்து வெளியேற்ற மேற்கொண்டு வரும் நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டமானது இன்று(29) திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் நடைபெற்றுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முத்துநகர் ஒன்றிணைந்த அனைத்து விவசாய சம்மேளனங்கள் இணைந்து மேற்கொண்டிருந்தன.

தலைவர் இறந்தார் என்றால் கண்முன்னே தகுந்த ஆதாரம் முன்வைக்க வேண்டும்: முன்னாள் போராளி

தலைவர் இறந்தார் என்றால் கண்முன்னே தகுந்த ஆதாரம் முன்வைக்க வேண்டும்: முன்னாள் போராளி

கண்டன போராட்டம்

முத்து நகரில் 800 ஏக்கர் விவசாய காணிகள் சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்து, இந்திய கம்பெனிகளின் காணி திருட்டுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம், குளங்களை அளிப்பது ஒரு அபிவிருத்தியா, பூர்வீக குடிகளை வெளியேற்றாதே, குளம் இல்லாமல் நாங்கள் மண்ணையா சாப்பிடுவது, போன்ற சுலோகங்களை வேண்டியவாறு மக்கள் இந்த கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பகுதியில், மூன்று கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1000 குடும்பங்கள், கடந்த 53 ஆண்டுகளாக 800 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலங்களில் நெல், சோளம், வெண்டைக்காய், தர்பூசணி மற்றும் பேரிச்சை போன்ற பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.

முத்துநகர் மக்களின் காணிகளை அபகரிக்க வேண்டாம்: திருகோணமலையில் போராட்டம் | Muthunagar Peoples Protest In Trincomalee

ஆனால், துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாடுகள் மற்றும் வழக்குத் தாக்கலுக்குப்பின், 2025 பெப்ரவரி மாதத்தில் விவசாயிகளை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலங்களில் 200 ஏக்கர், இரண்டு தனியார் சூரிய மின் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டு, ஒன்று தற்போது இயங்குகிறது. 100 ஏக்கர் போதுமானது என்றாலும், 200 ஏக்கர் பலவந்தமாக அபகரிக்கப்படும் நிலை காணப்படுகிறது.

கடந்த வருடத்தில் (2024) வாரி சௌபாக்கியா திட்டத்தின் கீழ் அரசாங்கம் குளங்களை திருத்த நிதி ஒதுக்கீடு செய்தது. தகரவெட்டுவான் குளம் 80 வீதம் திருத்தப்பட்ட நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபையால் நிறுத்தப்பட்டது. இதேபோல் அம்மன் குளத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு திருத்தம் செய்ய அனுமதியை மறுத்து தடுத்து நிறுத்தியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்கப்படாததுடன், நட்டஈடும் வழங்கப்படவில்லை. பாடசாலை, கோவில்கள், வாவிகளுடன் கூடிய விவசாய நிலத்தை இவ்வாறு அபகரிப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருக்கோவில் இந்து மயானத்தில் இனியபாரதியின் சகாவுடன் சிஐடி சோதனை..!

திருக்கோவில் இந்து மயானத்தில் இனியபாரதியின் சகாவுடன் சிஐடி சோதனை..!

உர மானியங்கள் 

முத்துநகர் பகுதியில் அமைந்துள்ள நான்கு வாவிகளில் மூன்றே தற்போதும் எஞ்சியுள்ளன. விவசாயிகளின் நீர்ப்பாசன வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மூன்று கிராமங்களை சேர்ந்த 1000 குடும்பங்கள் 800 ஏக்கர் காணியில் 53 வருடங்கள் நெல், சோளம், வெண்டைக்காய், தர்பூசணி மற்றும் பேரிச்சை போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.

முத்துநகர் மக்களின் காணிகளை அபகரிக்க வேண்டாம்: திருகோணமலையில் போராட்டம் | Muthunagar Peoples Protest In Trincomalee

பயிர்செய்கைக்காக தனியான வாவிகளும் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த பிரதேசத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கடந்த வருடங்களில் பல்வேறு அரசாங்கங்களினால் உர மானியங்கள் கூட வழங்கப்பட்டிருந்தன.

2023 இல் துறைமுக அதிகார சபை பயிர் செய்கை நடவடிகைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து 2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய 2025 பெப்ரவரி மாதத்திலிருந்து விவசாயிகள் அங்கிருந்து வெளியேற்றப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது விவசாய நிலங்களுக்கு காணி உறுதிப் பத்திரம் கோரியிருந்த போதிலும், பிரதேச செயலாளர் அதற்கு அனுமதியளிக்கவில்லை என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

 இந்த போராட்டத்தில் மக்கள் போராட்ட கூட்டமைப்பின் தலைவர் வசந்த முதலிகே, முத்துநகர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், பலரும் கலந்து கொண்டனர்.

உயர்தரத்தில் தொழிற்கல்வி (NVQ) பாடநெறிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வெளியான தகவல்

உயர்தரத்தில் தொழிற்கல்வி (NVQ) பாடநெறிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Gallery
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US