சிறுபோக பயிர்செய்கைக்காக திறந்துவிடப்பட்ட முத்தையன் கட்டு குளம்
முத்தையன் கட்டு குளத்தின் கீழான சிறுபோக பயிர்செய்கைக்கான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
சிறுபோக பயிர்செய்கைக்கான பொதுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்று நீர்வழங்குவதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டு இன்று (16.02.2024) குளத்தின் நீர் விவசாய செய்கைக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உப உணவு செய்கை
இந்த நிலையில் இன்று திறந்துவிடப்படும் நீர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உப உணவு செய்கையாளர்களுக்கும் நீர் இறைக்கும்
இயந்திரங்கள்மூலம் நீரினை பெற்றுக்கொள்ள இந்த முறை வழிவகை செய்யப்பட்டுள்ளதோடு இதன் கீழ் 4522 ஏக்கரில் இம்முறை விவாசய செய்கை மேற்கொள்ள
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் நெல்பயிர் செய்கைக்காக 3684 ஏக்கரும் உப உணவு பயிர்செய்கைக்காக 828 ஏக்கரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறுபோக செய்கை
வேலியுடன் பயிர்செய்கையும், கால்நடையுடன் ஆட்களும் பராமரிப்பு என்ற அடிப்படையில் சிறுபோக செய்கையினை விவசாயிகள் மேற்கொள்ளவுள்ள நிலையில் குளத்திற்கான நீர் திறந்துவிடும் நிகழ்வு கமக்கரா அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் முத்தையன் கட்டு நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் மஞ்சுளா யொய்ஸ்குமார் அவர்களும் திட்ட பிரிவு உதவியாளர் வி.றாஜகாந்தன் அவர்களும் கலந்து கொண்டுள்ளதுடன் விவசாயிகள் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |