இந்துக்களுக்காக முஸ்லிம் சமூகம் குரல் கொடுக்க வேண்டும்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
வடக்கு - கிழக்கில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் அராஜகங்களுக்கு எதிராக வடகிழக்கில் உள்ள முஸ்லிம் சமூகம் குரல் கொடுக்க வேண்டும் என முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்றைய தினம்(11.03.2024) நடைபெற்ற வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்க எதிரான ஆட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வவுனியா வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூசையில் ஈடுபட்டிருந்த சைவ அடியார்களின் பூசை வழிபாடுகளை பொலிஸாரின் அராஜகத்தின் ஊடாக தடுக்கப்பட்டிருந்தது.
இன அழிப்புக்கான அறிகுறி
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக வடகிழக்கு பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது ஒரு திட்டமிட்ட இன அழிப்புக்கான அறிகுறியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இவ்வாறான வன்முறைகளை, மனித உரிமை மீறல்களை வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் சமூகமாக ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
