அதிரடியாக வெளியேற்றப்பட்ட அதிரடி படையினர்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இதுவரை காலமும் பணியாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதிரடி படையினருக்கு பதிலாக ரக்னா லங்கா தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் தீயணைப்பு மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை மீளப்பெறுவதாக சில மாதங்களுக்கு முன்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
அதிரடிப்படை வீரர்கள்
இதுவரை 200 பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் களனிகம, சீதுவ, குருந்துகஹ ஹதெக்ம, பின்னதுவ மற்றும் சூரியவெவ ஆகிய முழு நெடுஞ்சாலைப் பிரிவில் உள்ள ஐந்து முகாம்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
