வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தொடர்பில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ள விடயம்
வடக்கு, கிழக்கில் வாழும் மக்களும் எமது மக்களே எனவும், அவர்களுக்கு எந்தவித அநீதியும் இழைக்கப்படக் கூடாது எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் பேசும் மக்களை வேறுபடுத்தாது, இலங்கையர் என்ற உணர்வுடன் இணைந்து பயணிக்க வேண்டியது அவசியம் எனவும், ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் விருப்பமாக அமைந்துள்ளதாகவும், அவர்கள் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பின் வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், கொழும்பு அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி என்னை சந்தித்தித்தபோது , தமிழ் மக்களின் குறைபாடுகளை நீக்கி சகலரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுபப வேண்டும் என்பதை தாம் விரும்புவதாக கூறினார்.
அவர் இந்த நாட்டை நேசிக்கின்றார் என்பது எமக்கு தெரியும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எம் அனைரினதும் நோக்கமாகவும் உள்ளது.
அதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய தமிழ் தலைவர்கள் உள்ளனர். முஸ்லிம் தலைவர்களும் உள்ளனர். ஆனால் இனவாத அரசியல் கொள்கையில் அதனை செய்ய முடியாது.
இன்று நிறைவேற்று ஜனாதிபதி முறைமைதான் இந்த நாட்டின் சாபக்கேடு. மறைந்த மாதுலுவாவே சோபித தேரரும் அதனையே தொடர்ச்சியாக கூறிவந்தார்.
ஒரு நபருக்கு நிறைவேற்று அதிகாரத்தை கொடுத்தால் நாடு நாசமாகும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இன்றும் உள்ளோம். ஒருவருக்கு சகல அதிகாரங்களையும் கொடுக்காது நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை கொடுக்க வேண்டும்.
அதேபோல், வெளிநாட்டு தலையீடுகள் இல்லாது, எமது நாட்டுக்கென்ற புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஒரு நபரை இலக்காக வைத்து அதிகாரங்களை பலப்படுத்தவோ அல்லது ஒரு குடும்பத்திற்கு அதிகாரத்தை கொடுக்கவோ தீர்மானிக்காது, முழு நாட்டுக்குமான அரசியல் அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும்.
சகல மதங்களையும் பிரதிநிதித்துவப் படும் விதமாக சகல மக்களின் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் வாழும் மக்களும் எமது மக்களே, அவர்களுக்கு எந்தவித அநீநிதியும் இழைக்கப்படக்கூடாது. எமக்கு இருக்கும் சகல பிரச்சினைகளும் அவர்களுக்கும் உள்ளது. ஆகவே தமிழ் பேசும் மக்களை வேறுபடுத்தாது, இலங்கையர் என்ற உணர்வுடன் இணைந்து பயணிக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
