அமரகீர்த்தி அத்துகோரள கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபரை குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நிட்டம்புவை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
29 வயதான சந்தேக நபர் பேருந்து சாரதி எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு பிரதான சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி நிட்டம்புவை பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்டார்.