பாகிஸ்தானில் இலங்கையர் கொலை: கைதானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சியல்கோர்ட் பொலிஸ் பிரதானி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகவியலாளர் ஒருவருடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 26 பேர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி மீள நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் சிலரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை அந்த நாட்டு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கொடூர சம்பவத்திற்கு இலக்கான பிரியந்த! பாகிஸ்தானிடம் இலங்கை விடுத்துள்ள செய்தி
பாகிஸ்தானில் இலங்கையரொருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம்! பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 100 பேர் கைது
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |