கூர்மையான ஆயுதத்தால் குத்தி இளைஞர் கொடூரமாக கொலை!
அம்பாந்தோட்டை - வீரகெட்டிய பகுதியில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் ஹக்குருவெலவை சேர்ந்த 30 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம்
சம்பவம் தொடர்பில் மெதமுலன பகுதியைச் சேர்ந்த 29 வயது சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட தகராறு ஒன்று முற்றியதன் காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த மோதலின் போது சந்தேகநபரின் தாயாரும் காயமடைந்து வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் வீரகெட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.