பெண் ஒருவரிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடி: மூவர் கைது
பெண் ஒருவரின் வெற்றிபெற்ற அதிர்ஷ்ட இலாப சீட்டிலிருந்து 96,298,759.58 ரூபாய் மோசடியாகப் பெற்ற லொத்தர் விற்பனை பிரதிநிதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு பெண் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் 18 அன்று ஹபுதலயாவைச் சேர்ந்த ஒரு பெண் அதிர்ஷ்ட இலாப சீட்டொன்றை வாங்கி வெற்றி பெற்றிருந்தார்.
பொலிஸ் விசாரணை
இதனையடுத்து, குறித்த சீட்டை விற்பனை செய்த விற்பனை பிரதிநிதியும் மற்ற இரண்டு சந்தேக நபர்களும் அந்தத் தொகையை மோசடியாகப் பெற்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் துறையின் இரண்டு சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகளின் நீண்ட விசாரணைக்குப் பிறகு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி; அமெரிக்காவின் மிக உயர்ந்த போர்க்கப்பல்..ஈரானுடனான மோதலில் விலகல் News Lankasri