பெண் ஒருவரிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடி: மூவர் கைது
பெண் ஒருவரின் வெற்றிபெற்ற அதிர்ஷ்ட இலாப சீட்டிலிருந்து 96,298,759.58 ரூபாய் மோசடியாகப் பெற்ற லொத்தர் விற்பனை பிரதிநிதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு பெண் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் 18 அன்று ஹபுதலயாவைச் சேர்ந்த ஒரு பெண் அதிர்ஷ்ட இலாப சீட்டொன்றை வாங்கி வெற்றி பெற்றிருந்தார்.
பொலிஸ் விசாரணை
இதனையடுத்து, குறித்த சீட்டை விற்பனை செய்த விற்பனை பிரதிநிதியும் மற்ற இரண்டு சந்தேக நபர்களும் அந்தத் தொகையை மோசடியாகப் பெற்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் துறையின் இரண்டு சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகளின் நீண்ட விசாரணைக்குப் பிறகு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam
