காணாமல்போயுள்ள 15 வயது சிறுமி - மக்களிடம் உதவி கோரும் உறவினர்கள்
முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் காணாமல்போயுள்ளதாக தெரியவருகிறது.
கிறிஸ்துராசா மிதுசிகா என்ற சிறுமியையே கடந்த 35 நாட்களாக காணவில்லை என முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முள்ளியவளை பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சிறுமி தொடர்பில் விபரம் தெரிந்தவர்கள் 0766758057 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு உறவினர்கள் மக்களிடம் கோரியுள்ளனர்.