தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (Video)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு - கல்லடி சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் உபதலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். செல்வராசா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது உயிர் நீத்தவர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு, கூட்டுப்பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண அமெரிக்க மிசனின் குரு முதல்வர் அருட்தந்தை லூத் ஆகியோரினால் இந்த கூட்டுப்பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.
இதில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி
முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான
ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்
கி.துரைராஜசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.












தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam