யாழ். மாநகர சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பல பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் யாழ். மாநகரசபையிலும் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் - 19 சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இன்றைய தினம் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதி முதல்வர் து.ஈசன் உட்பட பல மாநகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் பின் கருத்து தெரிவித்த முதல்வர், உயிரிழந்த எமது உறவுகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது அவர்களது இழப்புக்கு நீதியை பெற்று கொடுப்பதாகும்.
நீதி கிடைக்கும் வரை ஓயாது போராட நாம் உறுதி பூணுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.






புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
