திருகோணமலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் (VIDEO)
மே 18 தமிழினப்படுகொலையின் 13ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் ஆலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
மே 18 தமிழினப்படுகொலையின் 13ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது திருகோணமலை தமிழர் சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலாவது ஈகைச்சுடர் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவரின் உறவினரால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூரும் முகமாக பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சமூக அபிவிருத்தி கட்சியின் தலைவர் குகதாசன் பிரகாஷ் மற்றும் இளைஞர் அணியின் தலைவர் கமல் திலீப்,சமய தலைவர்கள், கிழக்கைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
