மன்னார் மாவட்ட டெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாள், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
டெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.