உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் அஞ்சலி! (Photos)
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, இன்று (18.05.2023) நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நந்திக்கடலில் உயிர் நீத்த உறவுகள்
இதன்போது, நந்திக்கடலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்திய மக்கள்
இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியக் கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்கள் நினைவாக நந்திக்கடல் பரப்பில் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
நந்திக்கடலில் மற்றும் ஒருபகுதியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று வட்டாரக்கிளைகளின் தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan
