கனடாவிலிருந்து தாயகத்துக்கு திரும்பிய ஈழப் பிரஜைக்கு நேர்ந்த விபரீதம்..!
கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் முல்லைத்தீவு நாயாற்று கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(16.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுடன் கடலுக்கு சென்ற நபர்
மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞர் ஒருவர், கனடாவில் இருந்து வந்து இரண்டு நாட்கள் வருகை தந்துள்ளார்.
இவர், அவருடைய 5 நண்பர்களுடன் முல்லைத்தீவினை சுற்றிப்பார்பதற்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில் நண்பகல் அளவில் நாயாற்று பகுதிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற வேளையில், கடலில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சடலம் மீட்பு
இவ்வாறு உயிரிழந்தவர், 51 சதீசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அருகில் நின்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதுடன், இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.