யாழ். இந்துக் கல்லூரியில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த முள்ளிவாய்க்கால் பதாதை (Photos)
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (18.05.2023) நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யாழ். இந்துக் கல்லூரியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து பதாதை ஒன்று வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மரண ஓலங்களைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம்
“தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள் அல்ல நாம், எம் தாயாரின் மரண ஓலங்களைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பதாதை பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
You My Like This Video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |