2009 இல் தமிழர்கள் அழிந்த பின் அமெரிக்கா தாமதப்படுத்திய மற்றுமொரு முடிவு..
இன்றையதினம் மே 18, 17 ஆண்டுகளை கடந்தும் அழிக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி கேட்டு மக்கள் போராடி கொண்டு இருக்கின்றார்கள். 2009 வரை உயிர்ப்போடும் துடிப்போடும் இருந்த இனம் தற்போது பாரிய சரிவை எதிர்கொண்டுள்ளது.
இந்த 17 ஆண்டுகளில் தமிழினம் மீள்திறன் இல்லாத ஒரு இனமாக மாறிவிட்டது தான் துன்பம் என்று பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
இதனை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வதற்கான எந்த நடவடிக்கையும் இன்றி அப்படியே கலைந்து போனதை அதியசமாக பார்க்க வேண்டும்.
உலகத்திலுள்ள பல இயக்கங்களின் தலைவர்கள், தளபதிகள் மடிந்தாலும் அதன் மீள்திறன் இன்னும் கட்டமைக்கப்பட்டுகொண்டுதான் உள்ளது என குறிப்பிட்டார்.
2009 இல் தமிழர்கள் அழிந்த பின் அமெரிக்கா தாமதப்படுத்திய மற்றுமொரு முடிவு பற்றியும் எம்முடன் பகிர்ந்து கொண்டார். இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam