முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு கைது விவகாரம் : கண்டனம் வெளியிட்டுள்ள அருட்தந்தை மா.சத்திவேல்

Trincomalee Mullivaikal Remembrance Day Crime
By Shan May 13, 2024 06:39 AM GMT
Report

திருகோணமலை (Trincomalee) சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கிய நிகழ்வு ஏற்பாட்டாளர்களை கைது செய்தமை தொடர்பில் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் (M. Satthivel) கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இவரால் இன்று (13.05.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.

திருகோணமலை சம்பூர் பகுதியில் நள்ளிரவில் மூன்று பெண்கள் கைது! கதறி அழும் குடும்பம்

திருகோணமலை சம்பூர் பகுதியில் நள்ளிரவில் மூன்று பெண்கள் கைது! கதறி அழும் குடும்பம்

தொற்றுநோய் அபாயம் 

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உப்பு கஞ்சி பகிர்வோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்திருக்கையில் சம்பூர் பொலிஸார் கஞ்சி பகிருதலை தடுப்பதற்காக மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவை பெற்றிருப்பதோடு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் என இதுவரை நால்வரை கைது செய்துள்ளனர்.

மக்கள் ஒன்று கூடுதல் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என காரணம் காட்டி உள்ளனர். 

முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு கைது விவகாரம் : கண்டனம் வெளியிட்டுள்ள அருட்தந்தை மா.சத்திவேல் | Mullivaikal Kanji Arrest Satthivel Condemned

இது கோவிட் காலத்தில் பயன்படுத்திய சொற்றொடராகும். இதனையே மீண்டும் நினைவேந்தலை தடுத்து நிறுத்தும் ஆயுதமாக கையில் எடுத்திருப்பது இறந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும்.

சம்பூர் பொலிஸாரின் இத்தகைய அராஜக செயலை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு எதிர்வரும் விசாக பண்டிகையின் போது அதே தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி விசாக பண்டிகை நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவார்களா எனக் கேட்கின்றது.

எதிர்பார்ப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு காரணமாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹர குமாரையும் பாடசாலை மாணவி உட்பட பெண் சமூக செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுலை செய்ய வேண்டும்.

இத்தகைய கைதுகளால் நீதியை தடுத்து விட முடியாது என்பதை உறுதியாக கூறுகின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் நாம் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடு உரையாடிய போது சாதகமான பதிலளித்தமை மகிழ்ச்சியே.

முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு கைது விவகாரம் : கண்டனம் வெளியிட்டுள்ள அருட்தந்தை மா.சத்திவேல் | Mullivaikal Kanji Arrest Satthivel Condemned

இவ்வாறு பொலிஸ் நிலையத்தினரும் நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்கின்றோம். உப்பு கஞ்சியை சுதந்திரமாக குடிக்கவிடு எனும் மக்களின் நீதிக் குரலை, அரசியல் குரலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டிலாவது சர்வதேசத்தின் காதுகளுக்கு எட்டி விட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு” எனவும் அருட்தந்தை மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னாரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதாக கூறுவது வெறும் அரசியல் கோஷமே: ஐ.தே.க அமைப்பாளர் ஆதங்கம்

தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதாக கூறுவது வெறும் அரசியல் கோஷமே: ஐ.தே.க அமைப்பாளர் ஆதங்கம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US