கொடிகாவத்த - முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் கோவிட்டினால் மரணம்
கொடிகாவத்த - முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் ரங்கஜீவ ஜயசிங்க கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
கோவிட் நோய்த் தொற்றுக்கு இலக்காகி கடந்த ஒரு மாத காலமாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரங்கஜீவ, கடந்த வாரம் கோமா நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய ரங்கஜீவ ஜயசிங்க கொடிகாவத்த - முல்லேரியா பிரதேச சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam