கொடிகாவத்த - முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் கோவிட்டினால் மரணம்
கொடிகாவத்த - முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் ரங்கஜீவ ஜயசிங்க கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
கோவிட் நோய்த் தொற்றுக்கு இலக்காகி கடந்த ஒரு மாத காலமாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரங்கஜீவ, கடந்த வாரம் கோமா நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய ரங்கஜீவ ஜயசிங்க கொடிகாவத்த - முல்லேரியா பிரதேச சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 10 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
