முல்லைத்தீவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : ஒருவர் படுகாயம்! (Video)
முல்லைத்தீவு விசுவமடு பாரதிபுரம் கிராமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (10) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குடும்ப அங்கத்தவர்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாட்டு சம்பவத்தின் போது சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கியால் வெடி வைத்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதன்போது 22 அகவையுடைய இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக
நபர்கள் இருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து
வருவதுடன் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு இன்று (11) கிளிநொச்சி தடயவியல்
பொலிஸார் வரவழைக்கப்பட்டு வெடித்த இடியன் துப்பாக்கி மற்றும் தடையங்கள் என்பனவற்றை
விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam