முல்லைத்தீவில் தொழில் முயற்சியாளர்களுக்கு பிரதேச செயலக ரீதியாக வழங்கப்பட்ட முதலாவது விருது
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறந்த சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கல் விழா நேற்று (02.10.2025) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறந்த தொழில் முயற்சியாளர்கள் 8 பேரும், முன்னோடி தொழில் முயற்சியாளர்கள் 5 பேரும் என மொத்தம் 13 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட 27 பேருக்கும் ஊக்கச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கு பிரதேச செயலக ரீதியாக வழங்கப்பட்ட முதலாவது விருது வழங்கல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.




1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 22 மணி நேரம் முன்
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri