முல்லைத்தீவு மருத்துவமனை ஊழியரை தாக்கிய பெண் ஊழியர் கைது
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட மருத்துவமனையில் பெண் ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்திய மற்றுமொரு பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (23.06.2024) இடம்பெற்றுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 30ஆம் திகதி அன்று இடம்பெற்றுள்ளதையடுத்து, தாக்குதலை மேற்கொண்ட பெண் ஊழியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை
மேலும், அவர் தலைமறைவாகியிருந்த நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பில் முள்ளியளை பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, இன்று குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam