கிரிக்கெட் பயிற்சியை தொடங்கவுள்ள தோனி
சி.எஸ்.கே அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி இன்னும் 10 நாட்களில் துடுப்பாட்ட பயிற்சியை தொடங்கவுள்ளதாக அந்த அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் தோனியின் காலில் ஏற்பட்ட உபாதை ஒன்றின் காரணமாக அவர் அறுவை சிகிச்சை ஒன்றை எதிர்கொண்டுள்ளார்.
இதனால், அவர் தொடர் முழுவதும் பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
ஐ.பி.எல் ஏலம்
தொடர்ந்து, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், காசி விஸ்வநாதன், தோனி குறித்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாகவும் சாமர்த்தியமாகவும் செயற்பட்டிருந்தது.
டேரல் மிட்செல் 14 கோடி இந்திய ரூபாய்க்கும், சமீர் ரிஸ்வி 8.4 கோடி இந்திய ரூபாய்க்கும் மற்றும் ரச்சின் ரவீந்திரா 1.8 கோடி இந்திய ரூபாய்க்கும் சி.எஸ்.கே அணியால் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam