சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை பார்வையிடாது திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கௌதாரிமுனையில் சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதை சரியில்லை என கூறி மறுப்பு தெரிவித்து திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி ,பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்ஏ.சுமந்திரன் மற்றும் சி. சிறிதரன் ஆகியோர் சென்றிருந்தனர்.இருப்பினும் அவர்கள் குறித்த இடத்திற்கு செல்லாது திரும்பிவிட்டனர்.
இது தொடர்பில் பிரதேச கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை சென்று பார்வையிடுவதற்காக இன்று வருகை தந்தனர்.இருப்பினும் அவர்கள் மண்ணித்தலை கோவிலுடன் திரும்பி விட்டனர். அதற்கப்பால் செல்வதற்கு பாதை சரியில்லை எனவும், தொடர்ந்து பயணிக்க முடியாது என்று தெரிவித்து திரும்பிவிட்டனர்.
இதற்கு நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடிவர்கள் பின்னர் இவ்வாறு தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.







ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
