சிறிய ரக வாகனங்களில் நாடாளுமன்றத்திற்கு வந்த உறுப்பினர்கள்
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிய கார்கள் மற்றும் வான்களில் இன்றைய தினம் (17) நாடாளுமன்றத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். கடந்த வாரம் ஏற்பட்ட வன்முறையின் போதும் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மிகக் குறைவான சொகுசு வாகனங்களே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாதுகாப்பு படையினரும் வருவதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இன்றைய தினம் சுமார் 20 உறுப்பினர்கள் வரை நாடாளுமன்றத்திற்கு வரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் ஏற்பட்ட வன்முறையின் போது சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுக்கைகள் கூட முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக எஸ்.எம்.சந்திரசேன உட்பட பல உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri