நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தனிநபர் பிரேரணை
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக தனிநபர் பிரேரணைகள் இரண்டு , புதிய சட்ட மூலங்களாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இது தொடர்பான சட்டமூலங்களை தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணைகளாக முன்வைத்துள்ளார்.
பிரேரணை தாக்கல்
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் 30 சதவீதத்துக்குக் குறையாமல் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பிரேரணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 22 அரசியலமைப்புத் திருத்தமாக, ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியலில் 50 வீதத்துக்குக் குறையாத பெண் உறுப்பினர்களை உள்ளடக்குவதை வலியுறுத்தும் சட்டமூலம் ஒன்றும் நாடாளுமன்றத்தில் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri