குழந்தையை அடித்துக் கொலை செய்த தாயின் இரகசிய கணவன்
கம்பஹா, தெல்கொட பகுதியில் தாயின் திருமணத்திற்கு புறம்பான உறவால் வந்த கணவரால் குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்டதாக மீகஹாவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெல்கொட, சியம்பலபெவத்த பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மல்வன, உல்ஹிதிவல பகுதியைச் சேர்ந்த 49 வயது நபர் ஒருவர் இந்தக் கொலைச் சந்தேகத்தின் பேரில் பொலிஸார்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணத்திற்கு புறம்பான உறவு
மேலும், அவர் அந்தப் பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

விசாரணையின் போது, குழந்தையின் தாய் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றுக்கு முகம் கழுவச் சென்றிருந்த போது, குழந்தையின் அழுகையை தன்னால் தாங்க முடியவில்லை எனவும் அதனால் தாக்கியதாகவும் குழந்தை சுயநினைவை இழந்ததாகவும் சந்தேக நபர் கூறினார்.
தாய் முகம் கழுவ வீட்டிற்குத் திரும்பியபோது, குழந்தை கீழே விழுந்து சுயநினைவை இழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இருவரும் சேர்ந்து குழந்தையை பியகம மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதே சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குழந்தை கொலை
பின்னர், மருத்துவமனை அதிகாரிகள் இதுகுறித்து மீகஹவத்தை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

மஹாரா பதில் நீதிபதி ஜி. கே. சமிந்த பத்திரானா 23ஆம் திகதி பிற்பகல் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, பிரேதப் பரிசோதனைக்காக உடலை ராகம பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவப் பரிசோதகரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
போதைப்பொருள் குற்றத்திற்காக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இக்குழந்தையின் தந்தை, குழந்தை கொலை செய்யப்பட்ட மறுநாள் இதுபற்றி எதுவும் அறியாமல் வீட்டிற்கு வந்ததாகவும், சம்பவம் குறித்து அறிந்து குழந்தையின் உடலைப் பார்க்க ராகம மருத்துவமனைக்கு வந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மல்வனவில் உள்ள உலஹிதிவல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மே 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 22 மணி நேரம் முன்
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்... மகனுடன் வெளியிட்ட போட்டோ Cineulagam
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam