மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணம்

Mannar Hospitals in Sri Lanka Northern Province of Sri Lanka
By Ashik Nov 19, 2024 08:07 PM GMT
Report

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம் தாயே இன்றையதினம் (19.11.2024) செவ்வாய்கிழமை மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

முன்னதாகவே குறித்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்த போதிலும் உரிய விதமாகக் கவனிக்கப்படவில்லை எனவும் பெண் தனக்கு அறுவை சிகிச்சை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, வைத்தியர்கள் இயற்கை முறையில் பிரசிவிக்க முயற்சித்த போது, தாயும் பிள்ளையும் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அநுரவின் வருகையால் தூக்கி எறியப்பட்ட கருணா - பிள்ளையான் - டக்ளஸ்

அநுரவின் வருகையால் தூக்கி எறியப்பட்ட கருணா - பிள்ளையான் - டக்ளஸ்

உறவினர்கள் போராட்டம் 

வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாகவும் மரணம் அடைந்த விடயத்தை நீண்ட நேரமாக உறவினர்களுக்குச் சொல்லாமல் மறைத்துள்ளதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர். அத்துடன், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கூட பார்ப்பதற்குப் பெற்றோரை அனுமதிக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணம் | Mother And Infant Died In Mannar Hospital

இந்நிலையில், பெண்ணின் மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன எனத் தெரிவிக்கும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூடியிருந்த போதிலும் வைத்தியசாலை பணிப்பாளர், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ சம்பவ இடத்திற்கு நீண்ட நேரம் வருகை தரவில்லை எனவும் அவருடைய தொலைப்பேசியும் இயங்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஊழியர்களின் கவனயீனம்

இதேவேளை, குறித்த பிரசவ விடுதியில் பணிபுரியும் சில ஊழியர்கள் தொடர்ச்சியாக கவனயீனமாக செயற்படுவதாகவும் வேலை நேரத்தில் நாடகங்கள் பார்ப்பதாகவும், தொலைப்பேசிகளை அதிகம் பயன்படுத்துவதாகவும், பிரசவ விடுதிக்குள் நாய்கள் நிற்பதாகவும் அவற்றைக் கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணம் | Mother And Infant Died In Mannar Hospital

இவ்வாறான பின்னணியில் மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவ விடுதியில் கவனயீனத்தால் இவ்வருடத்தில் இடம்பெற்ற மூன்றாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐரோப்பா செல்ல காத்திருந்த இளைஞன் மரணம்

ஐரோப்பா செல்ல காத்திருந்த இளைஞன் மரணம்

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய அமைச்சரின் எதிர்பார்ப்பு

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய அமைச்சரின் எதிர்பார்ப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US