ஐரோப்பா செல்ல காத்திருந்த இளைஞன் மரணம்
ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல காத்திருந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
கேகாலை, தெதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகொட ஓயாவில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெதிகம பொலிஸார் தெரிவித்தனர்.
தெதிகம பிரதேசத்தை சேர்ந்த அஷான் பிரபோத என்ற 27 வயதுடைய திருமணமாகாத இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ருமேனியாவில் வேலை
அடுத்த மூன்று வாரங்களுக்குள் ருமேனியாவில் வேலைக்குச் செல்லத் தயாராக இருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல், உயிரிழந்த இளைஞர் உட்பட ஒன்பது பேர் கொண்ட குழுவினர் ஒரு இளைஞனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்றுள்ளனர்.
சடலம் கண்டுபிடிப்பு
அங்கு நீராடச் சென்ற போது அஷான் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இரவு வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை காணாமல் போன பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 3 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
