மட்டக்களப்பில் பொலிஸாரின் காவலில் இருந்த இளைஞனின் உயிரிழப்பிற்கான காரணம் வெளியானது - செய்திகளின் தொகுப்பு
மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணத்துக்கான காரணம் வெளியாகி உள்ளது.
குறித்த இளைஞன் ஐஸ் ரக போதைப்பொருளை அதிகளவில் விழுங்கியமையே அவரது உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்த இளைஞருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை அடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,