பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
அதிகரித்துச் செல்லும் கோவிட் தொற்றை அடுத்து தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்வது தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் - 19 நெருக்கடி இருந்த போதிலும் நாட்டின் இயல்பான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தற்போது கோவிட் 19 தொற்று நோயின் பரவலானது மிக மோசமான நிலையில் உள்ளது, மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 108 உயிரிழப்புகள் மற்றும் நாளாந்தம் 1800இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு என தொடர்கிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,