விடுதலைப் புலிகளின் தலைவர் கோராத வரி! முன்னாள் பிரதமர் - செய்திகளின் தொகுப்பு
அரசாங்கத்தின் தேர்தல் உறுதி மொழியும் கோசங்களும் ஒரே நாடு ஒரே சட்டம் என்றே காணப்பட்டது, ஆனால் துறைமுக நகருக்கென தனிச் சட்டத்தை உருவாக்குவதற்கு தற்போது முயற்சிக்கப்படுகின்றதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனை தாங்கள் எதிர்ப்பதாகவும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
உத்தேச ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் பார்க்கையில் இரு சட்டக் கொள்கையே இலங்கையில் ஏற்படப்போகின்றது. துறைமுக நகர் நிர்வாக கட்டமைப்பை மையப்படுத்தி அரசாங்கம் முன்வைத்துள்ள உத்தேச சட்ட மூலத்தின் பிரகாரம் ஒரே நாடு இரு சட்டங்கள் என்ற நிலைமையே ஏற்படவுள்ளது.
அதன் அடிப்படையிலேயே நோக்க முடிகிறது. நாடாளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்காது நிறைவேற்று அதிகாரம் சட்டங்களை உருவாக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறிப்பாக வரி அறவீட்டு அதிகாரங்கள் போன்றவைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட கோரியிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
