மாணவர்களுக்கான பகல் உணவுக்கு மேலும் நிதி ஒதுக்கீடு!
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பகல் உணவுக்காக மேலதிகமாக 4 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (04.10.2022) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போஷாக்கு உணவு

இதற்கமைவாக பகலுணவு வழங்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிகமாக மேலும் 1 மில்லியன் மாணவர்களுக்கு முழுமையான போஷாக்கு நிறைந்த ஒருவேளை உணவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலை மாணவர்களின் பகலுணவுக்கு தேவையான நிதியை வெளிநாட்டு நன்கொடை மூலம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும்
அதற்கு தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்து குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri