இலங்கையின் பாதீடு தொடர்பில் மூடிஸ் மதிப்பீடுகளின் நிலைப்பாடு
இலங்கையின் 2025ஆம் ஆண்டிற்கான பாதீட்டு செலவினம், நிதிப் பற்றாக்குறையை விரிவுபடுத்துவதற்கும், எதிர்பார்த்ததை விட மெதுவாக நிதி ஒருங்கிணைப்புக்கும் வழிவகுக்கும் என்று மூடிஸ் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.
இலங்கை தனது பாதீட்டை சமர்ப்பித்த அடுத்த நாளில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21.8வீதம்
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை, 2028 முதல் கடன் திருப்பிச் செலுத்தத் தயாராக மாற்றுவதை இந்த பாதீடு நோக்காக கொண்டுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்களன்று பாதீட்டை அறிவிக்கும் போது குறிப்பிட்டார்.
இந்த பாதீடு பெரும்பாலும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர்கள் இலக்குகளுடன் ஒத்துப்போகிறது.
இலங்கை நலன்புரி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக வளங்களை செலுத்துவதால், செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21.8வீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது,
அதே நேரத்தில் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1வீதமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இலங்கையின் இன்னும் பலவீனமான கடன் வாங்கும் திறன், இன்னும் குறுகிய வருவாய் அடிப்படை மற்றும் அடிப்படை சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்கொள்ளும் சவாலை இந்த பாதீடு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று மூடிஸ் மதிப்பீடுகளின் மூத்த ஆய்வாளரும் துணைத் தலைவருமான கிறிஸ்டியன் ஃபாங் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |