ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள்
ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் மற்றும் பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்தவர்களின் முஸ்லிம்களின் உடல்களை புதைப்பதற்கு எதிராக பௌத்த பிக்குகள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகே போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறித்த இடத்திற்கு வருகை தந்தமையை அடுத்து, பிக்குகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்யும்படி அரசாங்கத்தை வலியுறுத்தி மனு ஒன்றினை கையளித்தனர்.
ஆனாலும் இலங்கையில் வர்த்தமானி செய்யப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி, கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் உடல்கள் இறந்த 24 மணி நேரத்திற்குள் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.