காலி முகத்திடலில் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தேரர் கைது
தேசிய பிக்கு முன்னணியின் தேரர் வணக்கத்திற்குரிய கொஸ்வத்தே மகாநாம தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வணக்கத்திற்குரிய கொஸ்வத்தே மகாநாம தேரர் முக்கிய பங்காற்றினார். கடந்த சில நாட்களாக காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல செயற்பாட்டாளர்கள் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மூத்த தொழிற்சங்கவாதியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜோசப் ஸ்டாலினும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 28ம் திகதி நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
