காலி முகத்திடலில் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தேரர் கைது
தேசிய பிக்கு முன்னணியின் தேரர் வணக்கத்திற்குரிய கொஸ்வத்தே மகாநாம தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வணக்கத்திற்குரிய கொஸ்வத்தே மகாநாம தேரர் முக்கிய பங்காற்றினார். கடந்த சில நாட்களாக காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல செயற்பாட்டாளர்கள் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மூத்த தொழிற்சங்கவாதியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜோசப் ஸ்டாலினும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 28ம் திகதி நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri